தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் WiFi சேவை அறிமுகம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக, அரசு ரேஷன் கடைகளில் புதிய திட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
WIFI வசதி:
தமிழகத்தில் மாநில அரசு 35,323 ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கொரோனா நிவாரணத் தொகையாக 2000 ரூபாய் இரண்டு முறை வழங்கப்பட்டது. மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் WIFI வசதி கொண்டுவருவதாக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் வாழும் சாமானிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவில் ஒவ்வொரு கடைகளும் அமைந்துள்ளது. இந்த வகையில் ரேஷன் கடைகள் இருக்கும் இடம் வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதல் மற்றும் கடை அமைந்திருக்கும் சூழலை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Reliance Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பல புதிய திட்டங்கள் அறிமுகம்!
மேலும் கிராமப்புறங்களில் இணைய தளங்களின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. மேலும் அரசின் WIFI வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசு சேவை என்பதால் கட்டணம் குறைவாக இருக்கும் என்றும், ரேஷன் கடைகளில் வருமானம் ஈட்டும் வகையிலும் அமையும் என்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையை விரைவில் செயல்முறைப் படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.