தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் ‘Wi Fi’ வசதி அறிமுகம்!
தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், பல நல்ல திட்டங்களை தற்போதைய தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் பயன் அடைய விரைவில் ரேஷன் கடைகளில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கவிருக்கிறது.
புதிய வசதி அறிமுகம்:
தற்போதைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இண்டர்நெட்டிலேயே எல்லாம் கிடைத்துவிடுகிறது. மேலும் இன்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கிய போது பல நிறுவன பணியாளர்கள் ஆன்லைனில் வேலை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களிலும் மலைப் பகுதிகளிலும் இச்சேவை சரியாகக் கிடைப்பதில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் அதி வேகமான இணைய சேவையை வைஃபை மூலமாக கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வைஃபை வசதியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 35,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் 10,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் சில ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த கடைகள் அனைத்திலும் வைஃபை வசதியை கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ரேஷன் கடைகளை மக்கள் இணைய சேவை மையமாக கூட பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் திட்டம் என்பதால் கட்டணமும் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும், இதன் மூலமாக ரேஷன் கடைகளுக்கு வருமானம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ‘Wi Fi’ வசதியில் 5ஜி சேவைகளைத் தொடங்கலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் இந்த இணைய சேவைகள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.