தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இரவு பகல் பாராமல் மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். இந்த வகையில் தற்போது இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதே போல கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே இறுதியிலேயே தொடங்கி விட்டது.

Exams Daily Mobile App Download

தொடக்கத்தில் மிதமாக பெய்யத் தொடங்கிய மழை பின்னர் மெதுவாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து பெய்த கனமழையால், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளாவில் பருவமழையின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

இதையடுத்து தீவிரமாக பெய்து வரும் மழையால் கேரளாவில் அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி. பகுதிகளில் மழை விடாமல் பொழிந்து வருவதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!