தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூடுதல் பேருந்து வசதி! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா மற்றும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கபட்டு வருகிறது. ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மத்திய அரசு தலையிட்டு கச்சா எண்ணெய் விலை உயர்வை கண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேரவைக்கு பிறகு தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அதனை தொடர்ந்து சட்ட பேரவையில் தமிழகம் தனியார் மினி பேருந்து வழித்தடத்தை மேலும் 4 கி.மீ. நீட்டிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.