அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 27.25 % உயர்வு!
கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 24.50% இருந்து 27.25% ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்த்தப்படும் அகவிலைப்படி 2022 ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பென்சன் திட்டம் அறிவிப்பு!
தற்போது நிலவி வரும் பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் விலைவாசியால் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் விரைந்து அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் டிக்கெட் பயண கட்டணம் அதிகரிப்பு? அமைச்சர் விளக்கம்!
தற்போது உயர்த்தப்பட்டுள்ள 34% அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ரூ.540 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசை தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த உள்ளது. அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 27.25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.