மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பென்சன் திட்டம் அறிவிப்பு!
மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பென்சன் திட்டத்துக்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பிலிருந்து 1500 கோடியும் பங்களிக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இந்தத் தொகை 30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பென்சன் திட்டம்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சார்பில் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து ஒரு தொகை பிடித்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணிக் காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக அவர்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பிஎஃப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த நிலையில் EPFO அமைப்பு ஏதேனும் பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
மீண்டும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் – பிரதமர் ஆலோசனை!
மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் மாநில அரசு அவர்களின் தேசிய பென்சன் திட்ட நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வழங்கவிருக்கிறது. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேவையில் இருந்த அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பென்சன் திட்டத்தின் கழிவின் பலனைப் பெறவில்லை. இந்த விவகாரம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தவுடன், 4 முதல் 5 நாட்களில் இதற்கு தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முடிவால் சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
8வது, 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை!
இந்நிலையில் தற்போது தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கின்றனர். மேலும் அரசு வழங்கும் பங்கில் ஊழியர் பங்களிப்பையும் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பென்சன் திட்டத்துக்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பிலிருந்து 1500 கோடியும் பங்களிக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இந்தத் தொகை 30 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு, கருவூல அலுவலரால் சரிசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவர் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நான்கு-ஐந்து நாட்களில் தேசிய பென்சன் திட்ட நிலுவை தொகை ஊழியரின் கணக்கில் வந்துவிடும் என்றும் அறிவித்து உள்ளனர்.