மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சம்பள உயர்வு கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதத்தில் அகவிலைப்படி மற்றும் பொருத்துதல் காரணி உள்ளிட்ட பல சலுகைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும், மத்திய ஊழியர்களின் தேவைக்காக ஆகஸ்ட் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை அதிகரிக்க பரிசீலிக்க இருப்பதாகவும், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதனை செயல்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தால் கிட்டத்தட்ட 52 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஃபிட்மென்ட் காரணி தான் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானம் செய்கிறது. ஃபிட்மென்ட் காரணி உயருவதால் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மடங்குக்கு மேல் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொருத்துதல் காரணி அடிப்படையில் திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விரைவில் Sky பஸ்கள் அறிமுகம்? மத்திய அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், 7வது ஊதியக் குழுவின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் DA 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.