தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை விடுமுறை!
தமிழகத்தில் 1 – 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் தற்போது 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடபட்டது. இதனையடுத்து தேர்வுக்கான கால அட்டவணை வகுப்பு வாரியாக வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்றும் அதே போல 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. கடந்த 25ம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வு முடிந்த பிறகு மே 5 முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
Exams Daily Mobile App Download
தேர்வு நெருங்கி விட்ட நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் பள்ளி வருவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வாரத்தின் 6 நாட்கள் அதாவது சனிக்கிழமையும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தது. அதனால் தினசரி தொடர் வகுப்புகளை நடத்தி பாடங்களை நடத்தி முடிக்கவும். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தவும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
IIT Madras நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து கோடை காலம் என்பதால் சனிக் கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதனால் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.