ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3 சிலிண்டர் இலவசம்!
கோவாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி நடைபெற்ற தேர்தல் அறிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த முடிவு விரைவில் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சிலிண்டர்:
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையில் அதிகரித்து வரும் சிலிண்டர் விலை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாதாந்திர பட்ஜெட்டில் சிலிண்டருக்கான தொகை அதிகம் தேவைப்படுவதாக இல்லத்தரசிகள் கவலை தெரிவித்தனர். தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. அதனால் சிலிண்டர் விலை ஏற்றத்தில் மத்திய அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசால் 2.0 என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சியினரும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதில் பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தனர். தற்போது பாஜக அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – நிரந்தர சம்பளம், பதவி உயர்வு அறிவிப்பு!
இதனையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது குறித்த முன்மொழிதலை தயாரிக்கும்படி கோவா உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த முடிவு விரைவில் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுமார் 1.84 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எண்ணப்படுகிறது.