தமிழக மக்களுக்கு கருணைத்தொகை ரூ.24,000 ஆக அதிகரிப்பு – அரசின் அதிரடி அறிவிப்பு!
தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குறித்த கருணைத் தொகை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் 9242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிரடி அறிவிப்பு:
தமிழ்நாட்டில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கருணாநிதி 1970-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பினை உருவாக்கினார். இதனால் பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழக்கூடிய வழிவகை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற பெயரை ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்தார்.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் EPF கணக்கை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்வர் அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் விதமாக கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த கருணை தொகை பாழடைந்த குடியிருப்புகளை பராமரிக்கும் பணியை தொடங்குவதற்காக இரண்டு தவணைகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இதன் அடிப்படையில் முதல் தவணையாக ரூ.12,000 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.12,000 வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொகை இட மாறுதலுக்கு தேவையான செலவினங்களை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 9242 குடிமக்களுக்கு பராமரிப்பு பணிக்காக வழங்க உள்ள கருணைத் தொகையை, ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.24,000 ஐ ஒரே தொகுப்பாக கொடுக்க தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.