மத்திய கல்வி அமைச்சகம் ஆனது தமிழக பள்ளிக்கல்வித்துறை கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கான மானிய தொகையை விடுவித்துள்ளது.
மானிய தொகை:
மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ஒவ்வொரு கல்வி ஆண்டுக்குமான மானிய தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் தொடர் செலவினங்களுக்காக 2021- 22 ஆம் ஆண்டின் கணக்கின்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கான மானிய தொகையை வழங்க பரிந்துரை வழங்கியது. ஏற்கனவே 50 சதவீத பள்ளி மானிய தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீதமுள்ள ஐம்பது சதவீதம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க சரியான நேரம் சவரனுக்கு ரூ.280 குறைவு – இன்றைய தங்கம் விலை!
இதற்காக பள்ளி கல்வி இயக்குனருக்கு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகளின் படி ரூபாய் 63 கோடியே 20 லட்சத்து 72, 500 தொகையை வங்கிக் கணக்கிற்கு வழங்கி உள்ளது. இந்த 50 சதவீத மானிய தொகையினை வரும் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள டேப்களுக்கான சிம் வாங்குவதற்கு தேவையான தொகையினை மட்டும் பள்ளி மானியத்தில் இருந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை பணப்பரிமாற்றம் செய்திடவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு வழங்கியுள்ள முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் தொகையினை பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.