ஜூன் 13ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளிகள் & அலுவலகங்கள் மூடல்!
நாடு முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் இலங்கையில் வரும் ஜூன் 13ம் தேதியன்று அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை இப்போது மோசமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதாவது, இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏற்பட்ட தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை ஏற்றமும் பொது மக்களை கடுமையாக பாதித்து வந்தது. இதற்கு காரணமாக அரசை எதிர்த்து பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கி இருக்கின்றனர். இந்த சூழலில் போக்குவரத்து மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, நாடு முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் இலங்கையில் வரும் ஜூன் 13ம் தேதியன்று அரசாங்க விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நிதி நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் இருக்கும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு வரும் ஜூன் 13ம் தேதியன்று விசேஷ அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை செயல்படுத்துவது குறித்து பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இந்த விடுமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர வரும் ஜூன் 13ம் தேதியுடன் சேர்த்து 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பூரணை தினத்தை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.