1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு! அமைச்சர் அறிவிப்பு!
மஹாராஷ்டிராவில், பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் ஜூன் 15 அன்று தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
அமைச்சர் அறிவிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. மேலும் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதால் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. மேலும் தற்போது மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தற்போது மகாராஷ்டிராவில், சில வாரங்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கடந்த திங்கள்கிழமை அன்று 1,000க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே, மாஸ்க் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றாலும், மக்களை அணியுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாஸ்க் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பது நல்லது என்று டோப் ட்வீட் கூறியுள்ளார்.
ஜூன் 13ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளிகள் & அலுவலகங்கள் மூடல்!
மேலும் மகாராஷ்டிரா பள்ளிகள் அட்டவணைப்படி ஜூன் 15, 2022 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய கொரோனா தடுப்பு வழிமுறைகள் உள்ளடக்கிய SOP களும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வர்ஷா கெய்க்வாட் கூறியது, “மாநிலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது, இருப்பினும் கோவிட் பொருத்தமான நடவடிக்கைகளுடன் ஜூன் 15 அன்று பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து உள்ளோம், ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை, மேலும் பள்ளிகளுக்கு புதிய எஸ்ஓபிகள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.