100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு – மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!

0
100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு - மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!
100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு - மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!
100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு – மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா காலகட்டத்திற்கு பின் நாடு முழுவதும் ஏகப்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 100 நாட்களில் 10,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை துவங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்வு வாரியங்களின் தலைவர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

கொரோனா மூன்று அலைகளின் இறுதியில் ஏகப்பட்டோர் தங்களது நெருங்கிய சொந்தங்களை இழந்து இருக்கின்றனர். மேலும் பொருளாதார வீழ்ச்சி அதிகமாக நடந்திருக்கிறது. பல இளைஞர்கள் படித்து முடித்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 7 கட்டங்களாக சட்டசபை தேர்தலில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது.

IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

அதன் பின் இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். அவர் முதல்வரானது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். அதன் படி அவர் உத்தர பிரதேசத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு வாரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவை முறையை நீக்கி புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைந்து துவக்கவும் அறிவுறுத்தினார். மேலும், தேர்வுகள் நடத்துவதில் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – புதிய நிபந்தனைகள் வெளியீடு!

குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை உரிய முறையில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து தேர்வு வாரியங்கள் சார்பிலான ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் உள்துறையுடன் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். அத்துடன் ஆட்சேர்ப்பு செயல்முறை காலநீட்டிப்பு செய்வதாக இருக்க கூடாது. தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேர்வு வாரியங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் மாநிலத்தில் அடுத்த 100 நாட்களில் 10,000 க்கும் அதிகமானவர்களுக்கு மாநில அரசு பணி வழங்க வேண்டும். இதற்கான நடைமுறையை தேர்வு வாரியங்கள் உடனே துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!