மூர்த்தியால் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த எபிசோட்!

0
மூர்த்தியால் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த எபிசோட்!
மூர்த்தியால் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த எபிசோட்!
மூர்த்தியால் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம், பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் கலக்கி வருகிறது. கோபியின் திருட்டு தனம் எப்போது பாக்கியாவுக்கும், ராதிகாவுக்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமத்தில் விறுவிறுப்பான ப்ரோமோ ஓன்று வெளியாகி உள்ளது.

அடுத்த ட்விஸ்ட்:

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்கள் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றன. நேற்றைய எபிசோடில், மூர்த்தி தனம் ராதிகா வீட்டிற்கு சென்றனர். அப்போது ராதிகாவிடம், மூர்த்தி நீங்க கட்டிக்கப்போறவர் போட்டோ இருக்கா என கேட்க அவர் கோபியின் போட்டோவை எடுத்து காண்பித்தார். அதை பார்த்து இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். மேலும் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா என கேட்க கல்யாணம் ஆயிடுச்சு, அவரும் டிவோர்சுக்கு அப்ளை பண்ணிருக்காரு, டிவோர்ஸ் கிடைச்சதும் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என சொல்கிறார். இதைக் கேட்டு வீட்டுக்கு வந்த இருவரும் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்துடன் வந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அதன் பின்னர் எல்லோரும் ஊருக்கு கிளம்பி தயாராக இருக்கும்போது, மூர்த்தி கோபியிடம் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். ரூமுக்குள் சென்றவுடன் கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார் ராதிகா எல்லா விசயத்தையும் சொல்லிட்டாங்க உங்களுக்கு எப்படி பாக்யாவுக்கு துரோகம் பண்ண மனசு வருது என கேட்கிறார். இதெல்லாம் கேட்க நீ யாரு உனக்கு யாரு அதிகாரத்தைக் கொடுத்தது என கோபி கேட்க தப்பு யார் வேணாலும் தட்டிக் கேட்கலாம் என சொல்கிறார். இவர்களின் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்து கதவைத் தட்ட கதவை திறந்து உண்மையை சொல்லட்டுமா என மூர்த்தி கேட்க சொல்லுங்க என கோபி கூறுகிறார்.

இத்துடன் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் மகாசங்கம் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோவில் மூர்த்தி கிட்ட சத்தம் போடுற அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை என ஈஸ்வரி கேட்க, அதை நான் சொல்றேன் அத்தை என மூர்த்தி பேசத் தொடங்குகிறார். அதன் பிறகு தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ராதிகா வீட்டிற்குச் சென்று நீங்க நினைச்சுட்டு இருக்க மாதிரி கோபி நல்லவர் கிடையாது என கூறுகிறார். இதை தொடர்ந்து ராதிகா, கோபியா பத்தி எனக்கு தெரியும் அவரப்பத்தி நீங்க தப்பா பேசாதீங்க என அவர்களை திட்டி அனுப்பி விடுவார். அடுத்து கோபிக்கு போன் பண்ணி மூர்த்தியும் தனம், இங்க வந்து உங்கள பத்தி தப்பா சொல்றாங்க என கோபிடம் கேள்வி கேட்கிறார். இதை அடுத்து கோபி குடும்பத்தினரிடமும், ராதிகாவிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறார், இந்த வகையில் கதை நகரும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!