தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நியாய விலைக்கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறை:
ரேஷன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதோடு, அதனை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கண்காணித்தும் வருகிறது. மேலும் தமிழக சட்டசபை ஏப்ரல் 6 அன்று மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மற்றொரு சிக்கல் – காயத்தால் அவதிப்படும் மொயீன் அலி!
இந்நிலையில் இன்று, தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து, சட்டமன்றத்தில் உறுப்பினர் டி ஆர் பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ரேஷன் பயனாளிகளின் ஆதார் எண், விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின் பொருட்கள் வழங்கப்படுகிறது. விரல் ரேகை சரிபார்ப்பு வயோதிகம் போன்ற காரணங்களால் தோல்வியுறும் போது கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 98.23 சதவீத விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என கூறினார். இதை தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறுதானியங்களை அரசு கொள்முதல் செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, உணவுத் துறை இதுவரை நெல் கொள்முதலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். மேலும் நவீன அரிசி ஆலை அமைப்பது தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறினார்.