சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மற்றொரு சிக்கல் – காயத்தால் அவதிப்படும் மொயீன் அலி!
இந்த ஆண்டுக்கான IPL போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தீபக் சாஹர் மற்றும் ஆடம் மில்னே காயத்தால் விலகி இருக்கும் நிலையில் இப்போது ஆல்ரவுண்டர் மொயீன் அலியும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயம் காரணமாக இந்த முழு சீசனில் இருந்து வெளியேற இது அணிக்கு மிகப்பெரிய அடியாக மாறியது. இது தவிர பேட்டிங் மற்றும் பவுலிங் பிரிவில் நிலைத்தன்மை இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பயிற்சியின் போது ஆல்ரவுண்டர் மொயீன் அலிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் CSK நிர்வாகம் அவரது ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சில ஆட்டங்களில் மொயீன் அலியை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. இப்போது நடப்பு சாம்பியன்கள் மே 1ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அடுத்த ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.
பொதுத் தமிழ் ஆன்லைன் தேர்வுகள் – TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு…!
இதற்கிடையில் மொயின் அலி, கடைசியாக ஏப்ரல் 17ம் தேதியன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணிக்காக விளையாடினார். இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் CSK தோல்வியடைந்தது. இந்த போட்டி நடைபெற்ற 2 நாட்கள் கழித்து மொயின் அலி காயத்தால் பாதிக்கப்பட்டார். கடந்த 2021 சீசனில் நட்சத்திர வடிவத்தில் விளையாடிய மொயீன் அலி அதற்கு மாறாக இந்த ஐபிஎல்லில் மோசமாக ஆடி வருகிறார். ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர் மற்றும் ஆடம் மில்னே ஆகிய இருவரும் காயங்களால் பாதிக்கப்பட்டு பாதியில் விலகிய நிலையில் இப்போது மொயின் அலியின் காயமும் CSK அணியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.