சென்னை: ஆடி பெருக்கு அன்று அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து நகைப்பிரியர்களை சுற்றலில் விட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,416க்கு வந்துள்ளது. மேலும், தகவலுக்கு தொடர்ந்து படியுங்கள்.
ஆபரணத் தங்கத்தின் விலை:
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்றின் மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்பேற்பட்ட தங்க அணிகலன்களை வாங்குவது அவ்வளவு சுலபமும் கிடையாது. ஏனெனில் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒவ்வொரு கிராமும் எக்கச்சக்க விலையில் விற்பனையாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் தங்க விலையின் இத்தகைய மாற்றத்திற்கு அமெரிக்க டாலருக்கும் முக்கிய பங்கு உண்டு. அதாவது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது என்றால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். மேலும், முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் தங்கம் விலை அதிகரிக்கும். இதனால் சாமானிய மக்களும், நகைப் பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்தனர். இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – 17,135 பேருக்கு தொற்று உறுதி
அதாவது, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,802க்கும் சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,416க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்துக்கு நிகராக வெள்ளி பிரியர்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60 காசுகள் குறைந்து, ரூ.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஆக. 3) தங்கத்தின் விலைகுறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் குஷியாக உள்ளனர்.