இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – 17,135 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,135 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 17,135 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,67,144 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிதாக 47 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து நாட்டில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,03,610 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தாண்டு குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,37,057 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ
அத்துடன் இந்தியாவில் இதுவரை 2,04,84,30,732 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,49,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23,49,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அலட்சியம் காட்டாமல் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.