தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நகைக்கடன் தள்ளுபடி கிடையாது!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் அளவிலான நகைகள் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டதால் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் அரசு அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் இருந்தது. அதனால் நிபந்தனைகளில் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
இந்த விவரங்கள் சேகரிப்பின் போது நகைக்கடன் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நிபந்தனைகளில் ஒன்றாக 31.03.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற 13 லட்சம் பேரின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். 2022 பொங்கலுக்கு முன்பு நகைகள் கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!
நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நகைக்கடன் தள்ளுபடி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி தான், அதைத்தான் செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.