ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

0
ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டாலும் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதனால் புதுச்சேரியில் வரும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா 2வது அலை குறைந்து வருவதை தொடர்ந்து புதிதாக உருமாறிய கொரோன வகையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் தொற்று முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அதனால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!

இந்த ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மாநில மற்றும் யூனியன் பிரதே சங்களை ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதித்துக் கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் வலியுறுத்தலின் படி உத்திரபிரதேசம், டெல்லி, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 – பா.ஜ தலைவர் கோரிக்கை!

அதனை தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசு ஊரடங்கை வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, இளைஞர் திருவிழா, பொங்கல் பண்டிகையை தவிர்த்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பூங்கா, கடற்கரை சாலை உள்ளிட்டவைகளுக்கு இரவு 12.30 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!