தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!

0
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலால் மீண்டும் இது தொடர்பாக ஆலோசனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஒமைக்ரான் அச்சுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளும் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. அத்துடன் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட அரையாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் அமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 – பா.ஜ தலைவர் கோரிக்கை!

இதையடுத்து தமிழகத்தில் 1 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அத்துடன் ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் வகுப்புகள் தொடராமல் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்த தொற்று பரவல் அதிகரித்து கொண்டே தான் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!

இதன் காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “இனி வரும் காலங்களில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”. ஆதலால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!