தமிழகத்தில் இன்று நள்ளிரவு வரை கோவில்கள் திறக்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்கள் எந்த இடங்களிலும் ஒன்று கூட கூடாது என்று அறிவித்த நிலையில் இன்றிரவு கோவில்களுக்கு மக்கள் சென்று தரிசனம் செய்யலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு:
தமிழகத்தில் ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் வருடந்தோறும் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்து அறிவித்துள்ளது. இன்று இரவு பொதுமக்கள் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பெருநகர் காவல்துறை ஆணையர் திரு சங்கர் அறிவுறுத்தியுள்ளார். எனவே இன்று போலீசார் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவும், பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்கிறார்களா என்று கண்காணிக்கவும் உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நகைக்கடன் தள்ளுபடி கிடையாது!
2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடை விதிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பாபு தடைகள் குறித்து பேசினார். அதில் இந்து சமய மக்கள் கோவில்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு தரிசனம் பெற செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்களும், ஆன்மிகவாதிகளும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு திராவிட அரசு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டு பட்டியல் வெளியீடு!
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோவில்களுக்கு தரிசனம் பெற வரும் மக்கள் முகக்கவசமும், சமூக இடைவெளியும் விட்டு சுவாமியை தரிசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான பின்பற்றி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் இன்று இரவு கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது.