தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கான வட்டி தள்ளுபடி – பொதுமக்கள் கோரிக்கை!
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு வங்கிகளில் நகைகடன்கள் 5 பவுனிற்கு கீழ் இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நகைக்கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வட்டி தள்ளுபடி:
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் அளவிற்கு கீழ் உள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் முறையாக தேவையுள்ள மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தீபாவளி எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
இந்த கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களில் 5 பவுன் நகை அளவிற்கு கீழ் உள்ள அனைத்து கடன் விவரங்களும் பெறப்பட்டு, முறையாக ஆய்வு நடத்தப்படுகிறது. ஒருவர் பெயரில் உள்ள தகுதி பெற்ற ஒரு கடந்த் மட்டுமே தள்ளுபடி செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக கடன் பெறப்பட்டிருக்க வேண்டும் இது போன்ற பல படிநிலைகளை அரசு விதித்துள்ளது. போலியாக கடன் பெற்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் இருந்து நகைக்கடன் பெற்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு கடன் தள்ளுபடி இல்லை.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
வட்டியை செலுத்துங்கள் என்று மட்டும் அறிவிப்பு செய்து வருகின்றனர். மேலும், அரசின் விதிகள் காரணமாக பலருக்கும் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை. இது குறித்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், தமிழக அரசு பல்வேறு காரணங்களை காட்டி பெரும்பாலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுவரையிலும் கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் திடீரென்று 1 ஆண்டிற்கான வட்டி தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், ள்ளுபடி பெறாத உறுப்பினருக்கு வட்டியாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.