தீபாவளி எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
சென்னையில் வணிக சந்தையின் இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலக அளவில் தங்கம் அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர வர்கத்தினர் வரை அனைவருக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர்.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுபமுகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும். இன்னும் ஒரு சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் தங்கத்தின் விலை ஏறி வருகிறது.
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – நவ.10 கடைசி நாள்!
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.13 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் கிராம் ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.