ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் விளக்கம்!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கொரோனா அலையின் தாக்கம் சற்று உயர்ந்துள்ளது. அதனால் அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு அமல்
கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வந்த கொரோனா பாதிப்புகளானது கர்நாடகா மாநித்தில் மீண்டுமாக உயரத்துவங்கியுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு பின்னர் கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கவனிக்கையில், மங்களூரு, சிக்மகளூர், உடுப்பி, ஹாசன் மற்றும் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படலாம்.
இந்தியாவில் ஒரே நாளில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று – 585 பேர் உயிரிழப்பு!
இருப்பினும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், கொரோனா புதிய வழக்குகள் அதிகரித்து வரும் மாவட்டங்களில் மட்டும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது கருத்தின் படி, ஏற்கனவே கர்நாடகா முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
TN Job “FB Group” Join Now
அதனால் முழு ஊரடங்கு என்ற அவசியத்துக்கு கர்நாடகா இன்னும் வரவில்லை என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கர்நாடகாவின் அண்டை மாநிலமான கேரளாவில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து, கர்நாடகா எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் கீழ் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.