தமிழகத்தில் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இறுதியாக ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதியான இன்று காலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நோய் தடுப்பு நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்று கிழமையான நேற்று தமிழகத்தில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த வாரம் முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் டிக்கெட்!
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் புதிதாக 12,895 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதால் மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தினங்களில் தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்பார்கள். சென்னையில் இருந்து அதிக நபர்களுக்கு ஒரே நேரத்தில் வெளியூர்களுக்கு செல்வதால் அதிக கூட்டம் பேருந்துகளிலும், ரயில்களிலும் இருக்கும்.
ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!
இதனால் நோய் பரவல் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தமிழக அரசு கருதுகிறது. இதனால் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் தற்போது சுகாதார துறை அமைச்சர்கள், அதிகாரியால் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அடுத்ததாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அல்லது அதே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவு குறித்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.