திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் டிக்கெட்!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு - இன்று முதல் டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு - இன்று முதல் டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் டிக்கெட்!

திருப்பதியில் ஜனவரி 13ம் தேதி சொர்க்கவாசல் திறப்பையெட்டி உள்ளூர் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் முன்பதிவு செய்தவர்கள் 13ம் தேதி தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தரிசனம்:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. பிறகு தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் மாதந்தோறும் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!

இந்த நிலையில் டிசம்பர் 24ம் தேதி ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. புத்தாண்டு மற்றும் ஏகாதசி விழாவை முன்னிட்டு வெளியிட்ட 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 13ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காலை 8 மணி வரை விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு பிற மக்கள் அனுமதிக்கப்படுவார்.

Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

இந்த நிலையில் இன்று முதல் (ஜன.10) காலை 9 மணி முதல் திருப்பதியில் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் தினமும் 5,000 டோக்கன்கள் வீதம் 10 நாட்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி பூஜை நடைபெறுவதால் அன்றைய தினம் நவம்பர் மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் பிற தேதிகளில் வரலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!