ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – பிரதமர் உத்தரவு!

0
ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் - பிரதமர் உத்தரவு!
ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் - பிரதமர் உத்தரவு!
ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – பிரதமர் உத்தரவு!

கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நெதர்லாந்தில் ஜனவரி 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது ஜனவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஒரு மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வகை தொற்று நோய் கிருமிகள், ஒரு சில மாதங்களில் உலகின் பல நாடுகளுக்கும் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இது அதிவேகத்தில் பரவும் நோய்த்தொற்றாக இருப்பதால் உலக நாடுகள் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மற்ற நாடுகளுடனான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்தது. கொரோனா தொற்று முதல், இரண்டாம் அலை என்று அடுத்தடுத்து பாதிப்புகளை உண்டாக்கி விட்டது.

தமிழகத்தில் ஜன.19 முதல் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் – ஆசிரியர்கள் கவனத்திற்கு!

தற்போது கொரோனா வகை வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து உலகில் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இது மிகவும் அதிக வேகத்தில் பரவக் கூடிய தன்மை உடையதாக இருப்பதால் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் வகை ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக நெதர்லாந்து நாட்டில் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக நெதர்லாந்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 14ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் பொங்கல் பரிசு!

தற்போது முன்னதாக அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தற்போது ஜனவரி 25ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி உடற்பயிற்சிக் கூடங்கள், கடைகள், சலூன்கள் போன்றவை, மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பார்கள், உணவகங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஜனவரி 25ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!