விஜய் டிவி ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் ராஜுவுக்கு ரூ.50 லட்சம் கிடையாது? ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நேற்று நடந்து முடிந்த இறுதி சுற்றில் டைட்டில் வின்னராக ராஜு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பரிசுத்தொகை ரூ.50 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 105 நாட்களாக மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 மாறுபட்ட துறையை சேர்ந்த போட்டியாளர்கள் களமிறங்கினர். அவர்களில் புது முகங்களாக பலர் களமிறங்கி அவர்களில் சிலர் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் இருந்தனர். அவர்களில் நிரூப் ஐந்தாவது இடத்தையும், அமீர் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
குக் வித் கோமாளியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
மூன்றாவது இடத்தை பாவ்னியும், இரண்டாவது இடத்தை பிரியங்காவும் பிடித்தார். முதலிடத்தை ராஜு பிடித்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவருக்கு பிக்பாஸ் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால் ராஜு அந்த பரிசுடன் மட்டும் வெளியே செல்லவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை உடன், 105 நாட்கள் உள்ளே இருந்தது சேர்த்து வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
“அபி டெய்லர்” சீரியலில் களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
அதனால் டைட்டில் வின்னராக ரூ. 50 லட்சத்துடன், ரூ. 21 லட்சம் சம்பளம் சேர்த்து, ரூ. 71 லட்சத்துடன் ராஜு வெளியேறி இருக்கிறார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ளதால் வருத்தத்தில் இருந்தாலும் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற இருப்பதை கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.