தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் பொங்கல் பரிசு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இன்று முதல் அதனை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
2022 ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாகிய வெல்லம், ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு, துணி பை ஒன்று ஆகிய 21 மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பரிசு பொருட்கள் ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இப்பரிசு தொகுப்பினை பெறாதவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!
கடந்த 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் 88 சதவீதம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து ஜனவரி 17 இன்றும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது. அது ரத்து செய்யப்பட்டு பொங்கல் பரிசு பெறாதவர்கள் இன்று ரேஷன் கடைகளில் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?
மேலும் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பரிசுத்தொகுப்பினை வாங்க வரும் பொதுமக்கள் தமிழக அரசு வெளியிட்ட பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.