தமிழகத்தில் ஜன.19 முதல் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் – ஆசிரியர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் விடுமுறைக்கு பின் ஜனவரி 19ம் தேதி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் முறை மூலமாக வகுப்புகளை நடத்தி வந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதால் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் பொங்கல் பரிசு!
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14 முதல் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறைக்கு பின் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை என்று அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் பொங்கல் விடுமுறைக்கு பின் ஜனவரி 19ம் தேதி அன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல் செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.