தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஊழியர் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பின் கீழ் அனுமதிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்செயல் விடுப்பு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடியவகை உயிர் கொல்லி வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் பொங்கல் பரிசு!

கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலை எதிர்பாராத அளவு விளைவுகளை ஏற்படுத்தியது. தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து வந்தனர். இதனால் பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணையின் படி அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவரது குடும்ப நபர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தாலோ இத்தகைய சூழலில் முழுமையான சிகிச்சை பெறவும், வீட்டுத் தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

மேலும் தனிமை படுத்திக்கொள்ளும் காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பு கீழ் அனுமதிக்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விடுப்பு எடுக்க வட்டார மருத்துவ அலுவலரின் சான்று அவசியம். கொரோனா பாதித்த நபர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்பு தற்செயல் விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும். அப்பகுதியின் வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதம் மற்றும் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து விடுப்பு எடுக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!