தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

திமுக தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. ஆனால் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது அது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரூ.5,000 பொங்கல் பரிசு:

திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி ரூ.4,000, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், கூட்டுறவு சங்க வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி போன்ற பல விஷயங்களையும் முன்னிறுத்தியது. ஆட்சிக்கு வந்த உடன் இவற்றில் சிலவற்றை உடனடியாகவும், சிலவற்றை படிப்படியாகவும் செய்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு அரசு 21 வகையான மளிகை பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசுப்பொருட்களுடன் மக்களுக்கு ரூ.2,500 ரொக்கப்பணம் அளிக்கப்பட்டது.

இதேபோல் தற்போது அரசு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த விஷயம் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக செல்வாக்கு சற்று அதிக அளவில் உள்ளது. இதனை வைத்து திமுக – பாஜக இடையேயான போட்டியானது சுவரொட்டிகள் மூலம் அதிகரித்து வருகிறது. பொங்கலுக்கு அரசு ரூ.5000 வழங்காத காரணத்தால், பாஜகவினர், ‘தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே! பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் எங்கே?’ என்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இதற்கு பதிலடியாக திமுகவினர், “ஒன்றிய பாஜக அரசே! தேர்தலின்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்று சொன்னது என்னாச்சு?” என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு மீண்டும், “5 சவரன் கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்றவை எங்கே? தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முதல்வர் வரை சென்றுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களை சமாதானம் செய்யும் விதமாக ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வழங்க அரசு முடிவெடுத்து இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!