தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் ஓமைக்ரான் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் மக்களிடம் தெரிவித்தது, கொரோனா வைரசை தனிமனித இடைவேளை, முகக்கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை பெரிய ஆயுதம் ஆகும். மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் PM KISAN திட்டம் – 11வது தவணை பெற இது கட்டாயம்! எளிய வழிமுறைகள் இதோ!
இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் போதுமான அளவு உள்ளது. மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருக்கிறது. தமிழகத்தில் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கிடையில் 9 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளது. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என குறிப்பிட்டுள்ளார்.