ஞாயிற்றுக் கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? மாநில அரசு விளக்கம்!
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் தொடர்ந்து அடுத்தடுத்து கொரோனா வைரஸ் அலைகள் தாக்கி மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியது.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கிரெடிட் கார்டு, செக் கட்டணங்கள் அதிகரிப்பு!
அதன்படி அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பல கட்டுப்பாடுகளை விதித்து. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கேரளா மாநிலம் இரண்டாம் அலை பாதிப்புகளில் இருந்தே மீண்டு வர முடியாமல் இருந்து வந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தியது. அதனால் அங்கும் இரவு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் பொது இடங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!
தற்போது அரசின் முயற்சிகளால் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கேரளாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அம்மாநில முதல்வர் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்தார். மேலும் வரும் பிப்ரவரி 28ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் 50% மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.