மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000 ஆக உயர்வு? அரசின் முடிவு என்ன!
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மெண்ட் ஃபேக்டர் உயர்த்தப்பட்டு அவர்களது அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படும். இந்த ஆண்டு இது பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊதிய உயர்வு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இதன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் நிலுவை தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி அகவிலைப்படி உயர்வை கடந்த ஆண்டு கொண்டுவந்தது.
ஞாயிற்றுக் கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? மாநில அரசு விளக்கம்!
அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% ஆக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படையாக கொண்டு அவர்களது அடிப்படை ஊதியம் கணக்கிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் இது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அத்துடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மெண்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
அதன்படி அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கும். அதாவது பிட்மெண்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை 2.57 என்பதை 3.68 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் சங்கத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18000 என்பதில் இருந்து ரூ.26000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்த உள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.