மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரிபுராவில் 11ம் தேதி முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. இதையடுத்து இந்த தொற்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர், உத்திர பிரதேசம், ஹரியானா ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது.

தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பின்பற்றப்படும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை – மீண்டும் திறப்பு எப்போது? அரசின் முடிவு!

மேலும் உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!