பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை – மீண்டும் திறப்பு எப்போது? அரசின் முடிவு!
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே கலவரங்கள் ஏற்பட்டது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
பள்ளி, கல்லூரி திறப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுராவின் அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விதியை மீறி 6 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இவர்களுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் கல்லூரியை விட்டு அக்கல்லூரி முதல்வர் வெளியேற்றினார். அதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர்.
தமிழகத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.1500 வரவு – பாஜக தலைவர் அண்ணாமலை!
மேலும் ஹிஜாப் போராட்டத்துக்கு சில மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் சில எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலவரமும் ஏற்பட்டதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வழங்கும் சூப்பர் பயிற்சிகள் – தொழில் தொடங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
இதையடுத்து கா்நாடக மாநிலத்தில் மீண்டும் கல்லூரிகளை திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஹிஜாப் விவகாரத்தில் பொறுமையாக முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அடுத்த வாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அப்போது இருக்கும் சூழ்நிலை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.