மே 7 முதல் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!
தீவு நாடான சமோவாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு:
சீனாவின் உஹான் நகரில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு பரவியது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்களை வழங்கியது.
Exams Daily Mobile App Download
அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. இதனால் மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றில் இருந்து பாதுக்காத்தது. தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டு வந்ததால் கொரோனா பரவல் இறங்கு முகத்தை சந்தித்தது. அதனால் மக்களும் இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பினர். இந்த நேரத்தில் தீவு நாடான சமேரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று குறையாததால் ஊரடங்கானது மே 17ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விமானத்தில் அனுமதிக்கப்படுவர். இதுவரை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 92.6% பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 70,439 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.