தமிழகத்தில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்தது. பெரும்பாலான நாடுகளில் 2020ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை, மற்ற பல வளரும் நாடுகளை விட உயர்வாக உள்ளன. கொரோனா முடக்க நிலையில் தமிழகத்திலும் வேலையின்மை உச்ச நிலையில் இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அமைத்து தர பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், தனியார் நிறுவனங்கள், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு கம்பெனிக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த உள்ளனர்.

விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை? TCS, Infosys & Nestle நிறுவனங்களின் முடிவு இதுதான்!

விண்ணப்பதாரர் தகுதி : பிஇ, டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள்

விண்ணப்பதாரர் வயது வரம்பு :18 முதல் 35 வயது வரை

bநடைபெறும் இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (13, 20, 27 ஆகிய தேதிகளில்) காலை 10 மணிக்கு , தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!