ஏப்.24 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு எடுக்கும் முடிவு என்ன?

0
ஏப்.24 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசு எடுக்கும் முடிவு என்ன?
ஏப்.24 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசு எடுக்கும் முடிவு என்ன?
ஏப்.24 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு எடுக்கும் முடிவு என்ன?

இலங்கையில் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக ரூபாயின் மதிப்பை இலங்கை மத்திய வங்கி குறைத்தது. இதனால் பொருட்களின் மதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தடுக்க இலங்கை அரசு.ஊரடங்கு மற்றும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கை பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இலங்கை பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார சிக்கல், கடன் சுமை, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு போன்றவற்றால் அந்நாட்டு மக்களுக்கு உயிர் வாழ அடிப்படை தேவையான உணவு கூட கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. எரிபொருள் மற்றும் மின்சார வசதி கூட இல்லாமல் பொதுமக்கள் திண்டாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு!

அங்கு, 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு, இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என, குற்றம் சாட்டும் பொதுமக்கள், அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9வது நாளாக இலங்கை அதிபர் மாளிகை எதிரே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டியவை. இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

நிதி நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசு இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் நிலைக்கு அரசே காரணம் என மக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் ஒரு வாரத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே, உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, வரும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!