தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காகவும் மின் வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடந்து வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பொதுவாக மின்தடை குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இடம் மாறுதல் தேதி நீட்டிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், திருப்புத்துார் துணை மின்நிலையம் 11 கேவி பீடரில் புதிய மின் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அஞ்சலக தெரு, அகிழ்மனைத் தெரு,சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாப்பட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, சீதளிக்கீழ்க்கரை பகுதியில் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.