இனி பள்ளிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை – அரசு உத்தரவு!
மக்களின் 10 வருட கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு வாரந்தோறும் ஞாயிறு விடுமுறைக்கு பதிலாக வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை விடுமுறை:
நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கள் முதல் சனிக்கிழமை வேலை நாட்களாக இருந்து வருகிறது. மேலும், ஞாயிற்று கிழமை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை நாளாக உள்ளது. ஆனால் அரபு நாடுகளில் மக்களுக்கு வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட்டு, ஞாயிற்று கிழமை பணி நாளாக செயல்பாட்டில் உள்ளது. இதேபோல், தற்போது பீகாரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறையை மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!
எனவே, மக்களின் கோரிக்கையை பற்றி அரசு மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினார்கள். மேலும், ஆலோசனையின் முடிவில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் இனி ஞாயிற்று கிழமை வாராந்திர விடுமுறைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியினர் 10 ஆண்டு கால கோரிக்கைக்கு பின்னர் தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இஸ்லாமிய மக்கள் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் தொழுகைக்கு செல்வதற்கு வசதியாக தான் இந்த விடுமுறை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அரசு வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்த காரணத்தால் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் இனி கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் பள்ளிகளுக்கு வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்