TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!
மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப் பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றம் தொடர்பான செய்தியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய முழு தகவல்களை இங்கே பார்க்கலாம்.
TNPSC முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாரர் தேர்வாணையம் ஆனது மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப் பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த தேதியை TNPSC மாற்றியுள்ளது.
Exams Daily Mobile App Download
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடர்பாக அரசால் உள்ளூர் விடுமுறை அறிவித்ததன் காரணமாக மேற்குறிப்பிட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 1 அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.