தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு? வைரலாகும் செய்தி! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சில நாட்களாக கொரோனா அதிகம் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை பார்த்து பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
வைரலாகும் செய்தி:
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடியில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா மூன்று அலைகளாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு போடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆல்பா, பீட்டா, காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான்,டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!
சில மாதங்களாகத் தான் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால் அமலில் இருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் வாரம் தொடங்க உள்ளது. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சீனாவில் 2 மாதங்களுக்கு முன் கொரோனா நான்காம் அலை பரவத் தொடங்கி இருக்கிறது. சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் நோய் பரவல் உச்சம் தொடுவதால் கடந்த 1ம் தேதி முதல் ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது.
Exams Daily Mobile App Download
அமலில் உள்ள கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்கம் இந்தியாவிலும் பரவி, பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என பலர் அச்சத்தில் இருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவிலும் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 2 நாட்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐஐடி மாணவர்களில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் மேலும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளில் அமலில் இருந்த கடுமையான முழு ஊரடங்கு மே 1 முதல் மீண்டும் அமல்படுத்த இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.