தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச ரெயின்கோட், பூட்ஸ்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - இலவச ரெயின்கோட், பூட்ஸ்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - இலவச ரெயின்கோட், பூட்ஸ்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச ரெயின்கோட், பூட்ஸ்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக்காலங்களில் உதவும் வகையில் ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாத காலமாக கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.

பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

மேலும் பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்தனர். ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் 1 ஆண்டுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மழை காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு விரைவில்!

மழை காலங்களில் மாணவர்களுக்கு அதிகம் காய்ச்சல், இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் மழை அதிகம் பொழிய கூடிய மாவட்டங்களில் வசிக்க கூடிய மாணவர்கள் மழை காலங்களில் பள்ளிக்கு செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மழைக்காலங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அதனால் இவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ரெயின் கோட் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய திமுக தலைமையிலான அரசு, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல வகையான நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!