தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு விரைவில்!
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் கவுன்சிலிங் ஜனவரியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எனவே விரைவில் அதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொது இடமாறுதல் மற்றும் விருப்ப மாறுதலுக்காக கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த 2 ஆண்டு காலமாக பொது மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இது ஆசிரியர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த சூழ்நிலையில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இந்த ஆண்டு இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் என்று எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை இடமாறுதல் கவுன்சிலிங்குக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அதன்படி இனிமேல் புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு அந்த விதிமுறையில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கவுன்சிலிங் வரும் ஜனவரியில் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த பணி இடமாறுதல் கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்கும் என்றும், கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.