தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்த்தி தருமாறு அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போது 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தருவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படியினை உயர்த்தி தருமாறு அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 வது இடம்-வெள்ளி வென்றார் கிடாம்பி!
இந்நிலையில் 14வது அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் கூறியதாவது, தமிழக அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறினார். அத்துடன் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியுள்ளது. மேலும் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மதுபான விலை 20% குறைப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
மேலும் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். இதனை நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் தமிழக அரசு ஊழியர்களின் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.