உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 வது இடம்-வெள்ளி வென்றார் கிடாம்பி!
ஸ்பெயின் நாட்டில் நடந்து வந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சிங்கப்பூரிடம் தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளி வென்றார் கிடாம்பி:
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 26வது முறையாக ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறி வந்த கிடாம்பி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் இரு இந்திய வீரர்கள் மோதினர்.
பள்ளிகளுக்கு டிச.23 முதல் டிச.30 வரை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் தனது சக நாட்டு வீரரான லக்ஷயா சென்னுடன் கடும் போட்டியில் ஈடுபட்டார். முதல் பகுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய லக்ஷயா முன்னேறி வந்த நிலையில், இரண்டாம் பகுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். போட்டியின் இறுதியில் சக நாட்டு வீரரான லக்ஷயாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மதுபான விலை 20% குறைப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிடாம்பி சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் லோ கியான் யூ கிடாம்பியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி பதக்கத்தை வென்றார். இந்தியா சார்பில் உலக பாட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளி வென்ற சாதனையை கிடாம்பி படைத்துள்ளார்.